Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்டோ, வேன் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி மனு

ஜுன் 11, 2021 09:12

திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை ஆட்டோ, கார், வேன் தொழிலார்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2000கும் மேற்பட்ட குடும்பத்தினார் இந்த தொழிலை நம்பி உள்ளனர். எனவே எங்களை காக்க இந்த ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு மாதம் தோறும் 5000 உதவி தொகை இழப்பிடாக வழங்க வேண்டும்.

மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, பர்மிட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்து ஆட்டோ தொழிலார்கள் முன்னணி சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், செல்வம்  மாவட்ட துணைத்தலைவர்கள் தாமோதரன், என்.டி.நாகராஜ் மற்றும் இயக்க நிர்வாகிகள் 29க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்